பதிவு செய்த நாள்
22 பிப்2020
02:40
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.டி.பி., குழுமம், ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின், விமான நிலைய வணிகத்தின், 49 சதவீத பங்குகளை, 10 ஆயிரத்து, 780 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.
ஏ.டி.பி., குழுமம், இதற்கு முன், ‘பாரீஸ் ஏர்போர்ட்’ எனும் பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து, ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.டி.பி., குழுமம், எங்கள் விமான நிலைய வணிகத்தின், 49 சதவீத பங்குகளை, 10 ஆயிரத்து, 780 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.
இதனால், நிறுவனத்தின் கடன் சுமை குறையும்.முதற்கட்டமாக, 5,248 கோடி ரூபாயை உடனடியாக பெற உள்ளோம். இந்த தொகை, நிறுவனத்தின் பணப்புழக்கம் மற்றும் லாபத்தை மேம்படுத்த உதவும்.இவ்வாறு, ஜி.எம்.ஆர்., நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய வணிகத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு, ஜி.எம்.ஆர்., வசமே இருக்கும். ஏ.டி.பி., நிறுவனம், நிர்வாகக் குழுவில் பிரதிநிதித்துவம் பெறுவதோடு, ஜி.எம்.ஆர்., மற்றும் அதன் துணை நிறுவனங்களின் வழக்கமான உரிமைகளையும் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|