பதிவு செய்த நாள்
22 பிப்2020
02:42
புதுடில்லி: இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, ‘அக்சென்சர்’ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், 26 ஆயிரத்து, 270 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகம். இதையடுத்து, உலகத்திலேயே, மூன்றாவது பெரிய நிதி தொழில்நுட்ப சந்தையாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தை, இந்தியா பிடித்துள்ளது.கடந்த ஆண்டில், 198 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த, 2018ல் இது, 193 ஆக இருந்தது. பணப் பரிமாற்ற நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், கடந்த ஆண்டில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த, 2018ம் ஆண்டில், இப்பிரிவில், 4,686 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதுவே, கடந்த ஆண்டில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.காப்பீடு தொழில்நுட்பத்தில், கடந்த ஆண்டில் முதலீடுகள், 74 சதவீதம் அதிகரித்துள்ளது.முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகையில், பணப் பரிமாற்ற நிறுவனங்களில், 58 சதவீத அளவுக்கும், காப்பீடு தொழில்நுட்பத்தில், 13.7 சதவீத அளவுக்கும், முதலீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|