பதிவு செய்த நாள்
23 பிப்2020
05:21
புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்ெடட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் விரைவில் இணைய உள்ளன.
இந்நிலையில், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை, இணைப்புக்கு பின், வங்கிக்கு புதிய பெயரை வைக்க வேண்டும் என, நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.இதற்கு முன், பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க், தேனா பேங்க் ஆகியவை இணைந்த போது, பெரிய வங்கியான, பேங்க் ஆப் பரோடா பெயரே இணைப்புக்கு பின் வைக்கப்பட்டது.எனவே, துவக்கத்தில் குறிப்பிட்ட மூன்று வங்கிகளின் இணைப்புக்கு பின், பஞ்சாப் நேஷனல் பேங்க் பெயரே வைக்கப்படும் என தெரிகிறது.இந்நிலையில், மீதி இரு வங்கிகளும், பஞ்சாப் நேஷனல் பேங்க் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இருப்பினும், புதிய பெயர் வைப்பதற்கான வாய்ப்பு குறைவு தான் என்கின்றனர், அதிகாரிகள்.தேனா பேங்கும், விஜயா பேங்கும் இத்தகைய கோரிக்கையை முன்வைத்ததாகவும், ஆனால், அதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், பேங்க் ஆப் பரோடா பெயரே வைக்கப்பட்டது. அதனால், இப்போதும் அதே நடைமுறை தான் பின்பற்றப்படும் என்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|