பதிவு செய்த நாள்
24 பிப்2020
10:57
சென்னை: தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது. இன்று(பிப்., 24) ஒரேநாளில் சவரன் ரூ.752 உயர்ந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.94 உயர்ந்து ரூ.4166க்கும், சவரன் ரூ.752 உயர்ந்து ரூ.33,328க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.43,740க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.
விலை ஏற்றம் ஏன்?
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்தியாவிலும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதன்காரணமாக தங்கத்தில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனாலேயே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ஏற்றம் மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|