பதிவு செய்த நாள்
25 பிப்2020
18:32
மத்திய அரசு புதிய ஜவுளிக்கொள்கையை அறிவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்தி, வரைவு ஜவுளிக் கொள்கையை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
ஜவுளி சார்ந்த அமைப்புகளும் அரசை மட்டும் எதிர்பார்க்காமல், தன்னகத்தே வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகளையும், திட்டங்களையும் வகுத்துவருகின்றன. இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு(ஐ.டி.எப்.,) வரும் நிதியாண்டில் நான்கு விஷயங்களை மையமாக கொண்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னெடுக்கிறது.ஐ.டி.எப்., - 'கிரிசில்' அமைப்பு நடத்திய நிதிநிலை ஆய்வில், நுாற்பாலைகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இடையே லாப இடைவெளி அதிகரித்து செல்வது தெரியவந்துள்ளது.
எனவே, ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கட்டமைப்பில் கவனம் செலுத்த தொழில் மற்றும் நிபுணர் ஆலோசனை குழு ஒன்றை உருவாக்கி தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.நம் பகுதி ஜவுளி உற்பத்தியை பசுமை மற்றும் சுற்றுச்சூழல் உற்பத்தி மையமாக, 'பிராண்டிஸ்' செய்யும் முயற்சியாக, இளம் தலைமுறை தொழில்முனைவோர் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 30 முதல் 40 சதவீத நிறுவனங்கள் நடைமுறை மூலதனப் பிரச்னைகளை சந்திக்கின்றன.இதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படுவதுடன், ஜவுளி உற்பத்தி நிறுவன மேலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தலைமைப்பண்புக்கான பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|