அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும்அன்னிய செலாவணியை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும் ...  உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்! ...
‘கொரோனா’ வைரஸால் வட்டி குறையலாம்: ரிசர்வ் வங்கி குறித்து, டி.பி.எஸ்., வங்கியின் ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2020
07:19

சிங்­கப்­பூர்: ‘கொரோனா’ வைரஸ் தாக்­கு­த­லால் ஏற்­பட்­டி­ருக்­கும் பாதிப்­பு­களை, ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு கணக்­கில் எடுத்­துக் கொள்ள வாய்ப்­பி­ருப்­ப­தாக, சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்­கி­யின் ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

கொரோனா வைரஸ் தாக்­கு­த­லால், சீனா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு நடை­பெ­றும் வினி­யோக தொடர்பு பாதிப்­புக்கு உள்­ளாகி இருக்­கிறது. இதை­ய­டுத்து, இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, அடுத்த கூட்­டத்­தில், வட்டி விகி­தத்தை நிர்­ண­யிக்­கும்­போது, இப்­பி­ரச்­னை­யை­யும் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளும் என, டி.பி.எஸ்., வங்கி ஆய்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

விலையேற்றம்:
இது குறித்து, ‘இந்­தியா: வளர்ச்சி மற்­றும் பண­வீக்க இலக்கு மதிப்­பாய்வு’ எனும், டி.பி.எஸ்., வங்­கி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் மேலும் கூறப்­பட்­டுஉள்­ள­தா­வது: கொரோனா வைரஸ் தாக்­கு­தலை அடுத்து, சீனா­வி­லி­ருந்து இந்­தி­யா­வுக்­கான வினி­யோ­கங்­கள் பாதிப்­புக்­குள்­ளாகி இருக்­கின்றன. இந்­தி­யா­வில் உள்ள உள்­நாட்டு தயா­ரிப்­பா­ளர்­கள் பலர், மொத்­த­மும் சீன இறக்­கு­ம­தியை நம்­பியே இருக்­கின்­ற­னர். இத­னால், இந்­தி­யா­வின் பல்­வேறு துறை­களில் பாதிப்­பு­கள் ஏற்­ப­டத் துவங்கி இருக்­கின்றன.

சீனா­வில், நோயின் தாக்­கு­தல், ஏப்­ரல் முதல், ஜூன் வரை­யி­லான காலாண்டு வரை நீடிக்­கும்­பட்­சத்­தில், இந்­தி­யா­வின் உள்­நாட்டு உற்­பத்­தி­யில் தாம­தம் ஏற்­படும். மேலும் தற்­கா­லிக விலை­யேற்­ற­மும் தவிர்க்க முடி­யா­த­தாகி விடும். இதன் கார­ணத்­தால், ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு கூட்­டம், இந்த பாதிப்­பு­க­ளை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொள்ள வாய்ப்­பி­ருக்­கிறது.

நடப்பு நிதி­யாண்­டின், நான்­கா­வது காலாண்­டில், அதற்கு முந்­தைய காலாண்டை விட, வளர்ச்சி குறை­வாக இருக்­கும். அடுத்த நிதி­யாண்­டின் முதல் காலாண்­டி­லி­ருந்து, இந்­திய பொரு­ளா­தா­ரம் மீண்­டும் வளர்ச்­சிப் பாதைக்கு திரும்­பும்.

பரிசீலனை:
நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 2019ம் ஆண்டு ஜூனில், 5 சத­வீ­த­மா­க­வும்; செப்­டம்­ப­ரில், 4.5 சத­வீ­த­மா­க­வும் குறைந்­துள்­ளது.இத்­த­கைய வளர்ச்சி குறைவு எண்­கள், நிதிக் கொள்­கையை வகுப்­ப­வர்­க­ளி­டம் அதிக அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தும். இந்­திய சில்­லரை விலை பண­வீக்க இலக்கை ஆய்வு செய்­த­தில், ரிசர்வ் வங்கி அறிக்­கை­யில் பெரிய மாற்­றங்­கள் எது­வும் ஏற்­பட வாய்ப்­பில்லை என்றே தெரி­கிறது. மேலும், பண­வீக்க இலக்கு கட்­ட­மைப்பை மாற்­று­வ­தற்­கான வாய்ப்­பு­களும் குறைவே.

கடந்த கூட்­டத்­தின்­போது, ரிசர்வ் வங்கி கவர்­னர் சக்­தி­காந்த தாஸ், சில்­லரை விலை பண­வீக்க இலக்கு குறித்த வரை­ய­றை­களை மறு­ப­ரி­சீ­லனை செய்­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

பண­வீக்­கம்:
இந்­திய ரிசர்வ் வங்­கி­யின், நிதிக் கொள்கை குழு, கடந்த இரு கூட்­டத்­தின்­போ­தும், வட்டி விகி­தத்­தில் எந்த மாற்­ற­மும் செய்­ய­வில்லை. தற்­போது, 5.15 சத­வீ­த­மாக ரெப்போ கட­னுக்கு வழங்­கும் வட்டி விகி­தம் உள்­ளது. சில்­லரை விலை பண­வீக்­கத்தை பொறுத்­த ­வரை, கடந்த டிசம்­ப­ரில், 7.35 சத­வீ­த­மா­க­வும்; ஜன­வ­ரி­யில், 7.59 சத­வீ­த­மா­க­வும் தொடர்ந்து இரண்டு மாதங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)