பதிவு செய்த நாள்
27 பிப்2020
00:39
புதுடில்லி: அமெரிக்காவின் முதன்மை சில்லரை வர்த்தக நிறுவனமான, ‘வால்மார்ட்’ இந்தியாவில் துவக்கிய, 28, ‘பெஸ்ட் பிரைஸ்’ ஸ்டோர்களில்,24 பிரமாண்ட கடைகளை, ‘பிளிட்கார்ட்’டின் கிட்டங்கிகளாக மாற்ற உள்ளது.
அமெரிக்காவில் முதன்மையான சில்லரை வர்த்தக நிறுவனமாகவும், உலகின் பல நாடுகளில் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமாகவும் விளங்கும் வால்மார்ட், இந்தியாவில், அதே பெயரில் தொழில் துவங்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது.வால்மார்ட் கடைகள் வந்தால், நாட்டில் உள்ள சில்லரை வர்த்தக கடைகள் அழிந்து விடும் என, வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்தது. முன்னதாக, நாடு முழுவதும், மிகப் பிரமாண்டமான முறையில், 28 பெஸ்ட் பிரைஸ் ஸ்டோர்களை வால்மார்ட் ஏற்படுத்தி இருந்தது. பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் போல அவை செயல்பட இருந்தன.
அவற்றிற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த ஸ்டோர்கள் முடங்கியுள்ளன. அவற்றை, இந்தியாவின் முன்னணி, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டின் கிட்டங்கிகளாக மாற்ற, வால்மார்ட் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், 24 ஸ்டோர்கள், கிட்டங்கிகளாக மாற்றப்பட உள்ளன.இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, வால்மார்ட் தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|