பதிவு செய்த நாள்
27 மார்2020
03:42
புதுடில்லி: ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளன.
‘பேடிஎம், அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், அத்தி யாவசியமற்ற பொருட்கள் விற்பனையை நிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளன.கடந்த புதன் கிழமையன்று, இந்நிறுவனங்கள், தங்கள் வினியோக ஊழியர்களை, போலீசார் தண்டித்ததை அடுத்து, இது குறித்து புகார் தெரிவித்துள்ளன.காவல் துறை கடுமைநாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் வினியோக சேவைக்கு அரசு விலக்கு அளித்திருந்தும் கூட, காவல் துறையினர் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக,
இந்நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.பேடிஎம் நிறுவனம், வினியோகத்தை எளிதாகவும் விரைவாகவும் செய்வது குறித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துஉள்ளது.பிளிப்கார்ட் துவக்கம்அமேசான் நிறுவனமும், தற்சமயம் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வினியோகம் செய்ய இருப்பதாகவும், நிலைமைகள் விரைவில் சீராகும் எனவும் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட், அதன் மளிகை பொருட்கள் வினியோகத்தை மீண்டும் துவக்கி உள்ளது.மளிகை பொருட்கள் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், பிற பொருட்கள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|