பதிவு செய்த நாள்
28 மார்2020
03:42
புதுடில்லி : தற்போது நடைமுறையில் இருக்கும், வெளிநாட்டு வர்த்தக கொள்கையை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, 2015 – 20ம் ஆண்டுக்கான, வெளிநாட்டு வர்த்தக கொள்கை நடைமுறையில் இருந்து வருகிறது. இது, 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, 2020 – 25ம் ஆண்டுக்கான, புதிய வர்த்தக கொள்கை நடைமுறைக்கு வர வேண்டும்.ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, 21 நாட்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தற்போதைய வர்த்தக கொள்கையை, மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
வர்த்தக அமைச்சகம், ஏற்கனவே அனைத்து தரப்பினருடைய ஆலோசனைகளையும் கேட்டு, புதிய வர்த்தக கொள்கையை தயாரித்துள்ளது.இருப்பினும், தற்போதைய கொள்கையே, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|