பதிவு செய்த நாள்
28 மார்2020
03:51
மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் வேகமாக அதிகரித்தது.
இருந்தும், வர்த்தக இறுதியில், தேசிய பங்குச் சந்தை மிதமான லாபத்துடனும், மும்பை பங்குச் சந்தை சரிவிலும் முடிவடைந்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கொரோனா பாதிப்பால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, சந்தைகள் அதுவரை எட்டிய உயர்வை இழந்தன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தக இறுதியில், 131.18 புள்ளிகள் இழந்து, 29815.59 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில், 18.80 புள்ளிகள் அதிகரித்து, 8660.25 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்செக்ஸ் பிரிவில், ‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனம், மிக அதிக அளவிலான இழப்பை சந்தித்தது; 8 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது.இதையடுத்து, ‘ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இண்ட் பேங்க், மாருதி, எச்.சி.எல்., டெக்’ ஆகிய நிறுவன பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.‘ஆக்சிஸ் பேங்க், ஐ.டி.சி., என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா’ ஆகிய நிறுவன பங்குகள், அதிக லாபத்தை ஈட்டின.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நாட்டின் வளர்ச்சி, நான்காவது காலாண்டில், 4.7 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, சந்தையில், மந்தநிலை குறித்த அச்சம், முதலீட்டாளர்களிடம் தலைதுாக்கியதை அடுத்து, சந்தைகள் அதுவரை எட்டிய உயர்வை இழக்கத் துவங்கின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|