வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  அன்னிய செலாவணி இருப்பு இரண்டாவது வாரமாக சரிவு அன்னிய செலாவணி இருப்பு இரண்டாவது வாரமாக சரிவு ...
சக்திகாந்த தாஸ் அறிவிப்பால் அச்சத்துக்கு ஆளான சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2020
03:51

மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் வேகமாக அதிகரித்தது.

இருந்தும், வர்த்தக இறுதியில், தேசிய பங்குச் சந்தை மிதமான லாபத்துடனும், மும்பை பங்குச் சந்தை சரிவிலும் முடிவடைந்தன. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கொரோனா பாதிப்பால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, சந்தைகள் அதுவரை எட்டிய உயர்வை இழந்தன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தக இறுதியில், 131.18 புள்ளிகள் இழந்து, 29815.59 புள்ளிகளில் நிலைபெற்றது.


தேசிய பங்குச் சந்தை, வர்த்தக முடிவில், 18.80 புள்ளிகள் அதிகரித்து, 8660.25 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்செக்ஸ் பிரிவில், ‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனம், மிக அதிக அளவிலான இழப்பை சந்தித்தது; 8 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தது.இதையடுத்து, ‘ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இண்ட் பேங்க், மாருதி, எச்.சி.எல்., டெக்’ ஆகிய நிறுவன பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.‘ஆக்சிஸ் பேங்க், ஐ.டி.சி., என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா’ ஆகிய நிறுவன பங்குகள், அதிக லாபத்தை ஈட்டின.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நாட்டின் வளர்ச்சி, நான்காவது காலாண்டில், 4.7 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, சந்தையில், மந்தநிலை குறித்த அச்சம், முதலீட்டாளர்களிடம் தலைதுாக்கியதை அடுத்து, சந்தைகள் அதுவரை எட்டிய உயர்வை இழக்கத் துவங்கின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)