சக்திகாந்த தாஸ் அறிவிப்பால் அச்சத்துக்கு ஆளான சந்தைகள் சக்திகாந்த தாஸ் அறிவிப்பால் அச்சத்துக்கு ஆளான சந்தைகள் ... விமான நிறுவனங்கள் திவாலாகும் ஐ.ஏ.டி.ஏ., பிரதமருக்கு கடிதம் விமான நிறுவனங்கள் திவாலாகும் ஐ.ஏ.டி.ஏ., பிரதமருக்கு கடிதம் ...
அன்னிய செலாவணி இருப்பு இரண்டாவது வாரமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2020
01:57

மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் கண்டுள்ளது.

மார்ச், 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக சரிந்தது. இது, இந்திய மதிப்பில், 35.24 லட்சம் கோடி ரூபாய். இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு, 48 ஆயிரத்து, 189 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக, தொடர்ந்து, அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் தற்போது சரிவு தொடர்கிறது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 1,198 கோடி டாலர் சரிவைக் கண்டு, 46 ஆயிரத்து, 991 கோடி டாலராக சரிந்துள்ளது. மார்ச், 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அதிகபட்சமாக, 48 ஆயிரத்து, 723 கோடி டாலராக இருந்தது.தற்போதைய சரிவுக்கு, வெளிநாட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது காரணமாக அமைந்தது. வெளிநாட்டு பண மதிப்பானது, 1,026 கோடி டாலர் குறைந்து, 43 ஆயிரத்து, 710 கோடி டாலராக சரிந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்திய ரூபாய், இதுவரை காணாத வகையில், 1 டாலருக்கு, 76.15 ரூபாய் என, மதிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தைகளிலிருந்து, தங்கள் முதலீடுகளை அதிக அளவில் வெளியே எடுத்துள்ளனர். மேலும், மதிப்பீட்டு வாரத்தில், தங்கத்தின் இருப்பும் குறைந்தது. தங்கத்தின் இருப்பு மதிப்பு, 161 கோடி டாலர் குறைந்து, 2,785 கோடி டாலராக சரிந்தது.

இது, இந்திய ரூபாய் மதிப்பில், 2.09 லட்சம் கோடி ரூபாய். இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)