பதிவு செய்த நாள்
30 மார்2020
01:50
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் சூழல், அண்மை காலங்களில் மேம்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடிகிறது. முதலீடுகளையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம். தற்போது, கொரோனா தற்காப்புக்காக வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில், முக்கிய நிதிச்சேவைகளை தடையில்லாமல் தொடர்வதற்கு, டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வங்கி சேவை:
வங்கி சேவை அத்தியாவசிய சேவைகள்கீழ் வருகிறது. எனவே, கிளைகள் இயங்கும். அவசர
தேவை தவிர, மற்ற பரிவர்த்தனைகளை இணையம் மூலம் மேற்கொள்ளலாம். ‘ஆன்லைன்’ வங்கி சேவையை, வங்கி இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ செயலி மூலம் அணுகலாம்.
காப்பீடு:
காப்பீடு நிறுவனங்கள் பாலிசி தொகை செலுத்தஅவகாசம் அளித்துள்ளன. காப்பீடு சேவைகளை டிஜிட்டல் மூலம் பெறலாம். பல நிறுவனங்கள், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாகவும்,காப்பீடு தொடர்பான தகவல்கள் வழங்குகின்றன. புதியமருத்துவ பாலிசி பெற விரும்பினால், நிறுவன தளங்கள் மூலம் ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ளலாம்.
பண பரிவர்த்தனை:
பணம் அனுப்புதல் மற்றும் பில் செலுத்துதல் போன்றவற்றை, இவற்றுக்கான டிஜிட்டல் செயலிகள் மூலம் மேற்கொள்ளலாம். டிஜிட்டல் பண பரிவர்த்தனையில், யு.பி.ஐ., சார்ந்த வசதி சிறந்ததாக கருதப்படுகிறது. ஏ.டி.எம்.,மையங்களுக்கு செல்வதையும் தவிர்க்கலாம். மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும், செயலி மூலம் செய்து கொள்ளலாம்.
மியூச்சுவல் பண்ட்:
மியூச்சுவல் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை, வங்கிகள் அல்லது ஆலோசகர்கள் மூலம் தொலைபேசி வழியே தெரிந்து கொள்ளலாம். இணையம் மூலமே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம்.பேடிஎம் மணி, மொபிகுவிக், ஸ்கிரிப்பாக்ஸ் உள்ளிட்டவைஇந்த சேவையை அளிக்கின்றன.
என்.பி.எஸ்.:
தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்.,முதலீட்டாளர்கள், யு.பி.ஐ., மேடை மூலம் முதலீடு செய்யலாம். புதிய கணக்கு துவக்க விரும்புகிறவர்கள், என்.பி.எஸ்.,இணையதளம் மூலம் கணக்கு துவங்கலாம். நிதிச்சேவைகளை டிஜிட்டல் மூலம் அணுகும் வாய்ப்பை, கொரோனா
பாதிப்பு காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|