பதிவு செய்த நாள்
31 மார்2020
04:46
புதுடில்லி: பஞ்சாப் நேஷனல் பேங்க், நாளை முதல், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பெரிய வங்கியாக உருவெடுக்கிறது.
இந்த மூன்று வங்கிகளின் இணைப்பை அடுத்து, பஞ்சாப் நேஷனல் பேங்க், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக, பஞ்சாப் நேஷனல் பேங்க், புதிய லோகோவை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்த புதிய லோகோ, மூன்று வங்கிகளின் தனித்துவமான அடையாளங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பை முன்னிட்டு, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, புதிதாக ஒரு பெயரை சூட்ட வேண்டும் என, கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கபடவில்லை.வங்கியின் லோகோவில் மாற்றம் செய்து, அதில் மூன்று வங்கிகளின் தனித்துவமான அடையாளங்கள் இருக்குமாறு உருவாக்கப்பட்டிருப்பதாக பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|