பதிவு செய்த நாள்
31 மார்2020
04:49
மும்பை; வாரத்தின் முதல் நாளான நேற்று, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் மற்றும் வாகன துறை பங்குகள் கடுமையாக விலை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 1,375.27 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 28,440.32 புள்ளிகளில் நிலை பெற்றது. நேற்று மட்டும் சென்செக்ஸ், 4.61 சதவீதம் சரிவைக் கண்டது. இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 379.15 புள்ளிகள் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 8,281 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 4.38 சதவீத சரிவாகும்.சென்செக்ஸ் பிரிவில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட, 12 சதவீதம் அளவுக்கு விலை சரிந்தன.
இதையடுத்து, எச்.டி.எப்.சி., டுவின்ஸ், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கோட்டக் பேங்க், மாருதி சுசூகி ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.மாறாக, நெஸ்ட்லே இந்தியா, டெக் மகிந்திரா, எச்.யு.எல்., ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் அதிக லாபம் ஈட்டின.ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்களன்று, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவைக் கண்டன.
கச்சா எண்ணெய் விலை சரிவும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தின.மேலும், பல தரநிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சியை குறைத்து கணித்து அறிவித்தன. இதன் காரணமாக, வர்த்தகத்தின் பிற்பாதியில், சந்தையில் பங்குகளை விற்பனை செய்வது அதிகரித்தது. சந்தை இறங்குவதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|