பதிவு செய்த நாள்
03 ஏப்2020
01:02
புதுடில்லி:‘இந்தியா போஸ்ட்’ நிறுவனம், மூன்று நாட்களில், 2,680 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை செய்துள்ளது.
கடந்த வாரம் வியாழன் முதல், சனி வரையிலான மூன்று நாட்களில் மட்டும், இந்தியா போஸ்ட் நிறுவனம், 2,680 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை செய்துள்ளது. இந்த மூன்று நாட்களில், மக்கள், 1,615 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்; 896 கோடி ரூபாயை, கணக்கிலிருந்து எடுத்துள்ளனர்.
வியாழனன்று, 819.72 கோடி ரூபாய், வெள்ளியன்று, 906.22 ரூபாய், சனியன்று, 954.22 கோடி ரூபாய் மதிப்புகளில், பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக, இந்தியா போஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த காலகட்டத்தில் இந்நிறுவனம், 1.51 லட்சம், ‘ஸ்பீடு போஸ்ட்’டுகளை வினியோகம் செய்துள்ளது.
நாட்டில் மொத்தம், 1.5 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 1.3 லட்சத்துக்கும் அதிகமான கிளைகள், கிராமப்புறங் களில் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் வகையில் நாடு, 21 நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அத்தியாவசிய தேவைகளின் அடிப்படையில், இந்தியா போஸ்ட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|