பதிவு செய்த நாள்
04 ஏப்2020
23:19
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனா வைரஸ் பாதிப்பால், நடப்பு நிதியாண்டில், 4 சதவீதமாக குறையும் என, ஏ.டி.பி., எனும், ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நாம், எதிர்பாராத சவாலான காலகட்டத்தை எதிர்நோக்கி உள்ளோம். வைரஸ் தாக்குதல், மக்களின் வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி வணிகத்தையும், பொருளாதார நடவடிக்கைகளையும் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
வைரஸ் தாக்குதலால், இந்தியாவின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில், 4 சதவீதம் என்ற குறைவான அளவிலேயே வளர்ச்சியை எட்டும்.வைரஸ் தாக்குதல், இந்தியாவில் இன்னும் முழுமையாக பரவவில்லை. வைரஸ் தாக்குதலும், மந்தமான உலக பொருளாதார நிலையும் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் உள்ளது.
கார்ப்பரேட் வரி, வருமான வரி ஆகியவற்றை குறைத்தது, நிதி துறையில் சீர்திருத்தங்கள் செய்தது ஆகியவற்றின் பலனை, இந்த வைரஸ் தாக்கம் தடுப்பதாக இருக்கிறது. இத்தகைய கடுமையான மந்தநிலையால், இந்தியாவின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டில், 6.1 சதவீதம் என்பதிலிருந்து, 5 சதவீதமாக குறைந்துவிடும்.
இதன் தொடர்ச்சியாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 4 சதவீதமாக குறையும். அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.2 சதவீதமாக பலம் பெறும்.தெற்காசியாவை பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், வளர்ச்சி, 4.1 சதவீதமாகவும்; 2021ல், 6 சதவீதமாகவும் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|