பதிவு செய்த நாள்
04 ஏப்2020
23:27
புதுடில்லி:நுகர்பொருட்களை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய வாடகையில், விலக்கு அல்லது தள்ளுபடி தருமாறு கோரிக்கை வைத்திருக்கின்றன.
நாடு முடக்கப்பட்டு இருப்பதால், மிகப்பெரிய கடை வளாகங்கள், மால்கள் ஆகியவற்றில் இயங்கும் ஸ்டோர்கள் மற்றும் தியேட்டர்கள், வாடகை விலக்கு அல்லது சலுகை தருமாறு கோரிக்கை வைத்துள்ளன.‘இ – மெயில்’பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், வணிக மால்களின் அதிபர்களும், தங்களுக்கு இத்தகைய கோரிக்கைகள் வருவதாக தெரிவித்துள்ளனர்
.‘சிட்டிவாக்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, யோகஸ்வர் சர்மா, இது குறித்து கூறும்போது, ‘‘ஏப்ரல் மாதத்துக்கு பில் போடாதீர்கள் என கேட்டு, எங்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து ஸ்டோர்களிலிருந்தும், ‘இ – மெயில்’ அனுப்பி இருக்கின்றனர்.‘‘ஸ்டோர்களை பயன்படுத்தாத நிலையில், எப்படி பில் போடுவது என்பது சரியான கேள்வி தான். ஆனால், அதே சமயம், எந்த லாபமும் இல்லாமல் சம்பளம், பராமரிப்பு உள்ளிட்டவற்றை எப்படி சமாளிப்பது? கஷ்டமான காலகட்டம் தான் இது. ‘‘இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாமல், எந்த முடிவுக்கும் வர முடியாது,’’ என்கிறார்.
அதே சமயம், ‘வி மார்ட் ரீட்டெய்ல்’ நிறுவனத்தின் தலைவர், லலித் அகர்வால், ‘‘நாடு முடக்கப்பட்டிருப்பதிலிருந்து மீண்டு, நிலைமை பழையபடி சரியாவதற்கு, மேலும் சில காலம் பிடிக்கும். ‘‘எனவே, வாடகை விஷயத்தில் மால் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,’’ என்கிறார்.
ஜி.எஸ்.டி.,இருப்பினும், ‘வரி மற்றும் ஜி.எஸ்.டி.,யில் சலுகை தராத நிலையில், வாடகையில் தள்ளுபடி செய்வது என்பது நடக்காத காரியம். வாடகை ஒரு பிரச்னையாகி இருக்கிறது. ‘இரு தரப்பும் உட்கார்ந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்’ என்கின்றனர், மால் உரிமையாளர்கள் தரப்பினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|