பங்குச் சந்தைகள் சரிவு வளர்ச்சி கணிப்புகளால் பாதிப்பு பங்குச் சந்தைகள் சரிவு வளர்ச்சி கணிப்புகளால் பாதிப்பு ...  வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
23:31

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சிறிதளவு அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 27 லட்சம் கோடி ரூபாய். இவற்றில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், அதிக சொத்து மதிப்பை கையாளும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்தமுள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 26.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, 24.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

பங்குச் சந்தைகள், மிகவும் ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த நிலையில், காலாண்டுகளுடன் ஒப்பிடுகையில், 1 சதவீத வளர்ச்சியே ஏற்பட்டிருந்தது.முதல், ஐந்து பெரிய பண்டு நிறுவனங்களில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு, நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்டு ஆகிய நிறுவனங்கள், அதிகளவிலான சொத்துக்களை, மதிப்பீட்டு காலத்தில் நிர்வகித்துள்ளன. மற்ற மூன்று மியூச்சுவல் பண்டு நிறுவனங்களான, எச்.டி.எப்.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., புருடன்ஷியல், ஆதித்ய பிர்லா சன்லைப் ஆகியவை, அவை நிர்வகிக்கும் சராசரி சொத்து மதிப்பிலிருந்து, சரிவைக் கண்டுள்ளன.

முதலிடம்

மதிப்பீட்டு காலத்தில், 3.73 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், முதலிடத்தில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் உள்ளது. எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், 3.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், மூன்றாவது இடத்தில் இருந்த, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், தற்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது.


டிசம்பர் காலாண்டில், எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகித்த சொத்து மதிப்பு, 3.56 லட்சம் கோடி ரூபாய்.எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகித்த சொத்து மதிப்பு, டிசம்பர் காலாண்டில், 3.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, நடப்பாண்டில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 3.70 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.


மூன்றாவது இடத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல், மார்ச் காலாண்டில், 3.51 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்துள்ளது.ஆதித்ய பிர்லா சன்லைப், 2.47 லட்சம் கோடி ரூபாயுடன், நான்காவது இடத்திலும்; நிப்பான் இந்தியா, 2.05 லட்சம் கோடி ரூபாயுடன், ஐந்தாவது இடத்திலும் மதிப்பீட்டு காலத்தில் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)