பதிவு செய்த நாள்
08 ஏப்2020
00:05
மும்பை, ஏப். 8–உலகளவில், பங்குச் சந்தைகள் உயர்வை கண்டது, நிதியமைச்சகம் 2 வது முறையாக சலுகைகளை அறிவிக்க இருப்பதாக செய்திகள் பரவியது போன்ற காரணங்களால், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், ஒரு நாளின் மிக அதிக அளவிலான உயர்வை சந்தித்தது. 2,567 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 2,476.26 புள்ளிகள் அதிகரித்து, 3,0067.21 புள்ளிகளில் நிலைபெற்றது. சதவீத அடிப்படையில், 2009ம் ஆண்டு, மே மாதத்திற்கு பின், அதிக உயர்வை நேற்று சென்செக்ஸ் சந்தித்தது. நேற்று மட்டும், 8.97 சதவீதம் உயர்வைக் கண்டது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 708.40 புள்ளிகள் அதிகரித்து, 8,792.20 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 8.76 சதவீத உயர்வாகும். நேற்று ஒரே நாளில் வர்த்தக துவக்கத்தில், முதலீட்டாளர்கள், 4.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து மதிப்பு உயர்வை கண்டனர்.சென்செக்ஸ் பிரிவில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு விலையும் நேற்று உயர்வைக் கண்டன. அதிகபட்சமாக, இண்டஸ்இண்ட் பேங்கின் பங்கு விலை, 22 சதவீதம் அதிகரித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|