பதிவு செய்த நாள்
22 மே2020
11:09
புதுடில்லி : நாடு முடக்கப்பட்ட சூழலில், நிறுவனங்களின் வருவாய், 25 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது என்றும், நிலைமை சரியாக, ஓராண்டுக்கும் மேல் ஆகும் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகளில் பெரும்பாலானோர், நிறுவன வருவாய் ஏற்கனவே, 25 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப, ஓராண்டுக்கு மேலாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.‘ஆன்லைன்’ முதலீட்டு நிறுவனமான, ’ஸ்கிரிப்பாக்ஸ்’ மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்ற நிறுவனர்கள், உரிமையாளர்கள், உயரதிகாரிகளில், 67 சதவீதத்தினர், நாடு முடக்கப்பட்டதால், ஏற்கனவே, 25 சதவீத வருவாய் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.மேலும், கிட்டத்தட்ட அனைவருமே, இயல்பு நிலை, 2021ல் தான் திரும்பும் என்றும் தெரிவித்துள்ளனர். அதில், 22 சதவீதத்தினர், இயல்பு நிலை திரும்ப, ஓராண்டுக்கு மேலாகும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு, 1,200 பேரிடம் மேற்கொள்ளப்பட்டதாக, ஸ்கிரிப்பாக்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|