அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு ...  பெருங்காய டப்பா! பெருங்காய டப்பா! ...
இரண்டு மாதங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.4,736 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2020
12:41

சென்னை: தமிழகத்தில், இரண்டு மாதங்களில் மட்டும், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு, 4,736 ரூபாய் அதிகரித்துள்ளது.


இந்தியாவில், தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. பாதுகாப்பான முதலீடாக, தங்கம் இருப்பதால், அதன் விலை உயர்ந்தாலும், மக்கள் வாங்கும் அளவை குறைத்து கொள்கிறார்களே தவிர, வாங்குவதை தவிர்ப்பதில்லை.தமிழகத்தில், மார்ச், 23ல், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,952 ரூபாய்க்கும்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 40.50 ரூபாயாக இருந்தது.அன்று முதல், தமிழக அரசின் உத்தரவை அடுத்து, அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டன. பின், அம்மாதம், 25 முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.நகை கடைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப, உள்நாட்டில், தினசரி நிலவும் தங்கம் விலையை, பெரிய நகை நிறுவனங்கள், பொது மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றன.தமிழகத்தில், தற்போது, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், சிறிய நகை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. நேற்று, கிராம் தங்கம், 4,544 ரூபாய்; சவரன், 36 ஆயிரத்து, 352 ரூபாய்க்கும் விற்பனையானது.இதையடுத்து, நேற்றுடன், இரு மாதங்கள் முடிந்த நிலையில், எப்போதும் இல்லாத வகையில், தங்கம் கிராமுக்கு, 592 ரூபாய்; சவரனுக்கு, 4,736 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பல நாடுகளில், கொரோனா வைரஸ் காரணமாக, தொழில்கள் முடங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.அமெரிக்க பங்கு சந்தையில், சீனாவின், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. தற்போது, அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து, சீன நிறுவனங்களை, அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள், மற்ற துறைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களில், தங்கம் விலை, மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)