சொந்த வீடு திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் சொந்த வீடு திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ... வீடுகளை விற்பனை செய்வதற்கு டிஜிட்டலுக்கு மாறும் நிறுவனங்கள் வீடுகளை விற்பனை செய்வதற்கு டிஜிட்டலுக்கு மாறும் நிறுவனங்கள் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
புதிய வீடு புக் செய்தவர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2020
23:54

ரியல் எஸ்டேட் திட்டங்கள் சூழலில், புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்தவர்கள், புதிய சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சொந்த வீடு கனவில் இருப்பவர்கள் ஏற்கனவே பல்வேறு காரணங்களால், வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுவதில் தாமதத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், கொரோனா நெருக்கடி நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கான, ‘லாக்டவுன்’ நடவடிக்கை காரணமாக, பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். இதனால், லாக்டவுன் முடிந்தாலும், கட்டுமானத் துறையில் பணிகள் துவங்க தாமதமாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமான நிறுவனங்கள் வீடுகள் ஒப்படைப்பதை ஆறு மாத காலம் தாமதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் ஆணையம் மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

.அதிகரிக்கும் சுமை

கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு ஆசுவாசம் அளிப்பதாக இருந்தாலும், வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது மேலும் தாமதமாகும். குறிப்பாக கோரோனா பாதிப்புக்கு முன், புதிய வீடு வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்கும் நிலை உள்ளது.

புதிய வீடு ஒப்படைக்கப்படுவது தாமதமாகும் என்பதால், குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுத்த படி, வீட்டுக்கடனுக்கான மாதத் தவணை செலுத்த வேண்டிஇருக்கும்.பொதுவாக கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு கடன் வழங்கும் போது வங்கிகள், கட்டுமான பணியின் முன்னேற்றத்திற்கு ஏற்ப கடன் தொகையை படிப்படியாக வழங்கும்.

இது போன்ற நிலையில், வீடு ஒப்படைக்கப்படும் வரை, கடனுக்கான வட்டியை மட்டும், இ.எம்.ஐ., க்கு முந்தைய தொகையாக செலுத்தி வரலாம். தற்போது இந்த தொகையை கூடுதல் மாதங்களுக்கு செலுத்த வேண்டும். இதனால் அசலில் எந்த கழிவும் இருக்காது என்பதால் இது கூடுதல் சுமையாக அமையும்.


மேலும், இந்த காலத்திற்கு வரிச்சலுகையும் பொருந்தாது.மதிப்பு குறையுமா?தேக்க நிலை காரணமாக, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளின் விலையை குறைக்கலாம் அல்லது விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடியை அறிவிக்கலாம். இதன் காரணமாக, புதிதாக வீடு வாங்கியவர்கள், தங்கள் வீட்டின் மதிப்பு குறையும் சூழலையும் எதிர்கொள்ள நேரலாம் என்கின்றனர். இத்தகைய எதிர்பாராத பிரச்னைகளுக்கு மத்தியில், வட்டி விகிதம் குறைந்து வருவது நம்பிக்கை கீற்றாக அமைந்துள்ளது.

ரெப்போ விகிதம் மற்றும் எம்.சி.எல்.ஆர்., விகிதம் தொடர்புடைய வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ளது.புதிய வீடு வாங்க வீட்டுக்கடன் பெற்றவர்கள் தங்கள் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருக்கிறதா என, பார்க்க வேண்டும். எனினும், வட்டி விகித பலனுக்காக, வேறு வங்கியை நாடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, கடன் பெற்ற வங்கியிலேயே வட்டி குறைப்பிற்காக பேசி பார்க்கலாம்.

அதே போல, கடன் தவணையை தள்ளி வைப்பதற்கான வாய்ப்பையும் இயன்ற வரை நாடாமல் இருப்பது நல்லது. இந்த வசதியை நாடுவது எதிர்கால வட்டி சுமையையே அதிகமாக்கும். பண முடை இருந்தால், கடனுக்கான காலத்தை நீட்டிக்கும் வாய்ப்பை பரிசீலிக்கலாம். ஆனால், இதனால் அதிக காலத்திற்கு கடன் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)