பதிவு செய்த நாள்
25 மே2020
23:50
புதுடில்லி:பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுவரும் ஐ.டி.சி., நிறுவனம், மசாலா பொருட்கள் தயாரிக்கும், ‘சன்ரைஸ் புட்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.
சன்ரைஸை எவ்வளவு ரூபாய் கொடுத்து ஐ.டி.சி., வாங்க இருப்பதாக சொல்லப்படவில்லை. இருப்பினும், 1,800 கோடி ரூபாயிலிருந்து, 2,000 கோடி ரூபாய்க்குள் இருக்கும் என, உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் கிழக்குப் பகுதியிலிருக்கும் மாநிலங்களில், மிகவும் வேகமாக வளர்ந்து வரும், 70 ஆண்டு கால நிறுவனமாகும் சன்ரைஸ் புட்ஸ்.
‘பல ஆண்டுகளாக ஒரு விசுவாசமான நுகர்வோர் தரப்பை சன்ரைஸ் உருவாக்கி இருக்கிறது. மேலும் அந்த பிராந்தியத்தின் சுவை மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் வேறுபட்ட ஒரு பிரிவை ஏற்படுத்தி இருக்கிறது.‘சன்ரைஸ் புட்ஸ் நிறுவனத்தை கையகப் படுத்துவதன் மூலமாக ஐ.டி.சி., யின் வளர்ச்சி, லாபகரமான வகையில் மேலும் அதிகரிக்கும்’ என, ஐ.டி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிவர்த்தனையில், சன்ரைஸ் நிறுவனத்தின் ஆலோசகராக, ஜே.எம்.பைனான்ஷியல் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.நாடு முடக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கையகப்படுத்துதலுக்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, உறுதி செய்யப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|