பதிவு செய்த நாள்
25 மே2020
23:56
புதுடில்லி:டாடா குழுமத்தின் சரித்திரத்தில், முதன்முறையாக, உயர்மட்ட பொறுப்பில் இருப்போரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., டாடா பவர் டிரென்ட், டாடா இண்டர்நேஷனல், டாடா கேப்பிட்டல், வோல்டாஸ் உள்ளிட்ட டாடா குழுமத்தை சேர்ந்த, தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள் ஆகியோரின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இக்குழுமத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:டாடா குழுமத்தின் சரித்திரத்தில், இதுவரை இல்லாத வகையில், முதன் முதலாக, உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுடைய ஊதியம், 20 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுஉள்ளது.
முதலில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ஊழியர்களை பாதுகாப்பதில் எப்போதுமே டாடா நிறுவனம் முன்மாதிரியாக இருக்கும். மாற்றங்கள் மேலிருந்தே துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|