பதிவு செய்த நாள்
26 மே2020
00:08
புதுடில்லி:ஊரடங்கு நீட்டிப்பு, பொருளாதாரத்தை பாதித்துள்ளது மட்டுமின்றி; வேறுவகையான மருத்துவ பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளதாக, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:ஆட்சியாளர்களுக்கு என்ன முடிவு எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்றாலும், ஊரடங்கு என்பது உதவிகரமாக இருக்காது.நான் இதற்கு முன்பு தெரிவித்திருந்ததை போல, ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பது மட்டுமின்றி; வேறு விதமான மருத்துவ பிரச்னைகளையும் ஏற்படுத்திஉள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்து வரும். நாம் ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.ஊரடங்கு நடவடிக்கை களால் பொருளாதார இழப்பை மட்டும் நாம் சந்திக்கவில்லை. கொரோனா தவிர, வேறு நோய்களுக்கான சிகிச்சை கிடைப்பதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதில் எந்த விதமான லாபமும் இல்லை.இவ்வாறு ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில், அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாகவே, நாடு மூன்றாம் கட்ட சமூகப் பரவலை எட்டிவிட்டதாக தான் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|