பதிவு செய்த நாள்
27 மே2020
23:56
திருப்பூர்:வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை, 5,000 கோடி ரூபாய் வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா தாக்கம் இன்னும் குறையாததால், ஒவ்வொரு நிறுவனங்களும், பல லட்சம் முதல் கோடிக்கணக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து வாங்க முடியாமல் தவிக்கின்றன.திருப்பூர், ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:திருப்பூரில் உள்ள, உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், 6ம் தேதி முதல் மீண்டும் இயக்க துவங்கியுள்ளன. இருப்பினும், வர்த்தகம் இயல்புக்கு திரும்பாததால், திருப்பூர் நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் வரை வராமல் உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|