பதிவு செய்த நாள்
28 மே2020
00:00
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனும் பாரத ஸ்டேட் வங்கி, அதன் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை, 0.40 சதவீதம் அளவுக்கு குறைத்து அறிவித்துள்ளது.
மேலும், எத்தனை ஆண்டுகளுக்கான நிலையான இருப்புத் தொகையாக இருந்தாலும், அனைத்துக்கும், 0.40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.இது, இந்த மாதத்தில், இரண்டாவது வட்டி குறைப்பாகும்.
நிரந்தர வைப்புத் தொகைக்கான இந்த வட்டி குறைப்பு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, எஸ்.பி.ஐ., தெரிவித்து உள்ளது.மேலும்,2 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகைக்கு, 0.50 சதவீதம் வட்டி குறைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இத்தகைய அதிக டெபாசிட்டுக்கான வட்டி, 3 சதவீதமாக இருக்கும். இதுவும் நேற்று முதல் அமலுக்கு வருவதாக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த, 12ம் தேதி, 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைகளுக்கு 0.20 சதவீத வட்டிக் குறைப்பை அறிவித்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|