பதிவு செய்த நாள்
28 மே2020
00:03
மும்பை:நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. மேலும் சென்செக்ஸ், 996 புள்ளிகள் உயர்வை சந்தித்தது.நிலை பெற்றது
மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 31,660.60 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது.பின், வர்த்தகத்தின் இறுதியில், 995.92 புள்ளிகள் அதிகரித்து, 31,605.22 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 3.25 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் நேற்று உயர்வை சந்தித்தது. வர்த்தகத்தின் இறுதியில், 285.90 புள்ளிகள் அதிகரித்து, 9314.95 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 3.17 சதவீத உயர்வாகும்.
சென்செக்ஸ் பிரிவில், ஆக்சிஸ் வங்கி அதிக விலை உயர்வை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 13 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தது. இதனையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எச்.டி.எப்.சி., வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தன.
உற்சாகம்
இதற்கு மாறாக, சன் பார்மா, அல்ட்ராடெக் சிமென்ட், டைட்டன், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன. உலகச் சந்தையின் போக்கு மற்றும் அதிகரித்த அன்னிய முதலீடுகள் ஆகியவை, உள்ளூர் முதலீட்டாளர்களை உற்சாகப் படுத்தியதன் காரணமாகவும் சந்தை நேற்று உயர்ந்தது. கடந்த செவ்வாய் அன்று, அன்னிய முதலீட்டாளர்கள், 4,716 கோடி ரூபாயை, பங்குகளில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|