பதிவு செய்த நாள்
31 மே2020
00:11
புதுடில்லி:ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மே மாதத்தில் மட்டும், 5 ஆயிரம் வாகனங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம், நாடு முடக்க தளர்த்தலுக்குப் பிறகு, கடந்த, 8ம் தேதியிலிருந்து, உற்பத்தியை துவங்கியது. உற்பத்தி துவங்கிய நாளிலிருந்து இதுவரை, 5 ஆயிரம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.கிம் கூறியுள்ளதாவது:மே மாதத்தில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்திருப்பதன் மூலம், நாங்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது, உள்ளூர்மயமாக்கல் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி ஆகியவற்றை அதிகரிப்பதற்கான ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்புக்கு சான்றாகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவிலிருந்து தன் ஏற்றுமதியை, 1999ம் ஆண்டில் துவங்கியது. இதுவரை, 30 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை, 88க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, பத்துக்கும் மேற்பட்ட மாடல்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கார் ஏற்றுமதியில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு, 2019ம் தேதி நிலவரப்படி, 26 சதவீதமாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|