‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் ... அட... 'முட்டை'தான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்! அட... 'முட்டை'தான் என்று குறைத்து மதிப்பிடாதீர்கள்! ...
தங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2020
00:32

மும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் முன்வர வேண்டும் என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான, ’ஹால் அண்டு பார்ட்னர்ஸ்’ உடன் இணைந்து, உலகின் முக்கியமான தங்கநகை சந்தைகளான இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில், 18 –65 வயதுடைய பெண்களிடம் கருத்துக் கணிப்பை, உலக தங்க கவுன்சில் மேற்கொண்டது.

இந்தியாவில் மேற்கொண்ட ஆய்வு குறித்து, உலக தங்க கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ள, 37 சதவீதம் பெண்கள், இதுவரை தங்கம் வாங்காதவர்கள். ஆனால் அவர்கள் வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும், தகுதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களில், 44 சதவீதம் பேர் கிராம பகுதிகளையும், 30 சதவீதம் பேர் நகர்ப்புறங்களையும் சார்ந்தவர்கள். சில்லரை நகை விற்பனையாளர்கள் இப்பிரிவினரை இலக்காக கொள்ளலாம்.


இந்திய பெண்கள், நகை வாங்குவதில் ஆர்வம் உடையவர்கள், என்றாலும்; இளம் தலைமுறையினர், தங்கம் தங்களது அந்தஸ்து, பேஷன் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவ தாக இல்லை என, கருதுகிறார்கள்.இளம் பெண்கள், தங்க நகைகளுடன் உணர்வு ரீதியாக இணைக்கப்படவில்லை. இது தொடரும்பட்சத்தில், எதிர்காலத்தில், சந்தையில் தேவை குறையும்.

இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகு பிறந்த பெண்களை ஈர்த்து, அவர்களின் தேவைகளை நவீன தொழில்நுட்பங்களுடன் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லை எனில், இத்தரப்பை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.இவ்வாறு உலக தங்க கவுன்சில் தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)