பதிவு செய்த நாள்
02 ஜூன்2020
21:50
திருப்பூர்:பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவுக்கான ஆடை ஏற்றுமதியை, மூன்று மடங்கு உயர்த்தலாம் என, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர்கள், இரு தரப்பு உச்சி மாநாடு நடத்த தயாராகி வருகின்றனர். இதனால், ஆஸி., நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜவுளி, வர்த்தக அமைச்சர்களுக்கு, ஏ.இ.பி.சி., எனும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டில், ஆஸ்திரேலியா மிகப்பெரிய ஆடை இறக்குமதியாளராக மாறியுள்ளது. தற்போது அந்நாட்டு ஆடை இறக்குமதியில், 64 சதவீதத்தை, சீனா வசப்படுத்தி வைத்து உள்ளது. ஆனால், இந்தியாவின் பங்களிப்பு, 1.2 சதவீதம் மட்டுமே உள்ளது. தற்போதைய சூழலில், ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டால், மிக எளிதாக ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதால், பிற நாடுகளுடனான போட்டியை எளிதாக எதிர்கொள்ள முடியும்.தற்போது, 1,556 கோடி ரூபாயாக உள்ள, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை, அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று மடங்கு உயர்த்த முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|