பதிவு செய்த நாள்
02 ஜூன்2020
23:10
சென்னை:மே மாதத்தில் மட்டும், 58 ஆயிரத்து, 906 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, டி.வி.எஸ்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று தொடர்பான ஊரடங்கு விதிகள் தளர்த்திய பின், மே, 6ல், நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் துவக்கப்பட்டன. அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களுக்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்பட்டன.
மேலும், அனைத்து வாகன விற்பனை மையங்களும் திறக்கப்பட்டு, விற்பனை துவங்கியது. இதன்படி, மே மாதத்தில் மட்டும், 58 ஆயிரத்து, 906 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதில், 56 ஆயிரத்து, 218 இரண்டு சக்கர வாகனங்களும், 2,688 மூன்று சக்கர வாகனங்களும் அடங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|