பதிவு செய்த நாள்
05 ஜூன்2020
13:20
மும்பை : அபுதாபியை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான முபடாலா, ஜியோவின் 1.85 சதவீத பங்குகளை வாங்க, ரூ.9,093.6 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களுக்குள், பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.87, 655.35 கோடி முதலீட்டை ஈட்டியுள்ளது. முபடாலா முதலீட்டு நிறுவனம், ஜியோ பங்குகளில் ரூ. 4.91 கோடியையும், ஜியோ நிறுவனத்தில் ரூ. 5.16 கோடியை முதலீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ, நாடு முழுவதும் 388 மில்லியன் சந்தாதாரர்களுடன் உயர்தர மற்றும் குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. ’அபுதாபியுடனான எனது நீண்டகால தொடர்பின் மூலம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அறிவு அடிப்படையிலான பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும் உலகளவில் இணைப்பதற்கும் முபடாலாவின் பணியினை தனிப்பட்ட முறையில் பார்த்துள்ளேன். முபடாலாவின் அனுபவம் மற்றும் உலகெங்கிலும் உள்ள வளர்ச்சி பயணங்களை ஆதரிப்பதன் மூலம் பயனடைவோம் என எதிர்பார்க்கிறோம்’ என ரிலையன்ஸ் குழும தலைவரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முபடாலா எலக்ட்ரானிக் சிப் உற்பத்தி நிறுவனமான குளோபல் பவுண்டரிஸை வைத்துள்ளது. ஏஎம்டி போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதுடன், பெட்ரோலியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விவசாயம், சுகாதாரம், உலோகம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது.
’இந்தியாவில் ஏற்கனவே ஜியோ தகவல் தொடர்புகளையும் இணைப்பையும் எவ்வாறு மாற்றியமைத்துள்ளார் என்பதை நாங்கள் கண்டோம். முதலீட்டாளர் மற்றும் பங்குதாரராக இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பயணத்தை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளோம். ஜியோவின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர் நெட்வொர்க் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம்’ என முபடலா முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான கல்தூன் அல் முபாரக் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|