பதிவு செய்த நாள்
02 ஜூலை2020
22:54
புதுடில்லி:சீனாவுடனான நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த நிதியாண்டில்,
48.66 பில்லியன் டாலர் ஆக குறைந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 3.68 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
சீனாவிலிருந்து இறக்குமதி குறைந்து வருவதால், அந்நாட்டுடனான இந்தியாவின் வர்த்தக
பற்றாக்குறை, கடந்த, 2019 – 20 நிதியாண்டில், 3.67 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது என,
அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த நிதியாண்டில், சீனாவிலிருந்து இறக்குமதி,
4.93 லட்சம் கோடி ரூபாயாகவும், இந்தியாவிலிருந்து சீனாவுக்குஏற்றுமதி, 1.25 லட்சம் கோடி ரூபாயாகவும்இருந்தது.
கடந்த, 2018 – 2019 நிதியாண்டில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 4.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டான 2017 – 18ல் வர்த்தக பற்றாக்குறை, 4.76 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தற்போது அரசு, சீனாவிலிருந்து இறக்குமதி ஆவதை குறைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளது.
முதற்கட்டமாக, இறக்குமதிக்கு, சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, பல தயாரிப்புகளுக்கான தொழில்நுட்ப விதிமுறைகள் மற்றும் தரம் குறித்த விதிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும், சீனாவிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை, சராசரி விலைக்கும் குறைவாக விற்பனை செய்வதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால், அத்தகைய பொருட்கள் மீது, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்பட்டுவருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|