பதிவு செய்த நாள்
08 ஜூலை2020
23:36
லுாதியானா:‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனம், சீனாவுடனான, 900 கோடி ரூபாய் வணிக திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றுள்ளது.
நாட்டின் சைக்கிள் சந்தையில், 44 சதவீதத்தை கொண்டுள்ள, முன்னணி நிறுவனமான, ‘ஹீரோ சைக்கிள்ஸ்’, சீனாவுடனான வணிக திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ’ஹீரோ சைக்கிள்ஸ்’ சுய சார்பை நோக்கி முன்னேறுவதாக, அதன் தலைவர் பங்கஜ் முஞ்சால் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நன்றாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது. நாங்கள், சீனா உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் உயர்தர சைக்கிள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இப்போது அவற்றை ஜெர்மனியிலிருக்கும் எங்களுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கிறோம். பொறியியல் பகுதிகள், பாகங்கள், வாகனத்துக்கான பிரேம்கள் ஆகியவற்றை, இப்போது நாங்களே செய்யத் துவங்கி இருக்கிறோம். அவற்றை உள்ளூர்மயமாக்கி வருகிறோம். விரைவில் சுயசார்புடைய நிறுவனமாக மாறிவிடுவோம்.
ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.‘வாட்ஸ்ஆப்’ என்ற ஒன்று பிறந்தது. அதைத் தொடர்ந்து, ‘ஊபர்’ உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் உதயமாகின. இம்முறை, கொரோனாவால் அனைத்தும் முடக்கப்பட்ட பிறகு, சைக்கிள் ஓட்டுவதில் ஒரு பெரிய எழுச்சியை காண்கிறோம்.எங்கு சைக்கிள்கள் ஓட்டுவது பாதுகாப்பானதாக இருக்கிறதோ, எங்கு அதற்கு தனிப் பாதைகள் இருக்கின்றனவோ, எங்கு பழுது நீக்கும் வசதிகள் இருக்கின்றனவோ, அங்கு ஓர் எழுச்சியை காணமுடிகிறது.
இங்கிலாந்தில் இருக்கும் என் மகளின் நிறுவனம், 600 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் அவரது நிறுவனமும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் பீஹார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம், மீண்டும் திரும்பி வருவது குறித்த எந்த திட்டமும் இப்போது இல்லை. அதனால், அங்கே அவர்கள் சைக்கிள்களை வாங்குகிறார்கள்.நாங்கள் இப்போது, ‘பிட்னஸ்’ பிரிவிலும் இறங்குவது குறித்து சிந்திக்கிறோம். ‘ஜிம்’களுக்கு செல்லும் நபர்கள், இப்போது சைக்கிளை தேர்வு செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|