மீண்டும் அதிகரிக்க துவங்கும் வேலை வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்க துவங்கும் வேலை வாய்ப்புகள் ...  மீட்சியை காணத் துவங்கியிருக்கும் நுகர்பொருள் தயாரிப்பு துறை மீட்சியை காணத் துவங்கியிருக்கும் நுகர்பொருள் தயாரிப்பு துறை ...
சீனாவுடனான 900 கோடி ரூபாய் வணிகம் உதறித் தள்ளியது, ‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
23:36

லுாதியானா:‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனம், சீனாவுடனான, 900 கோடி ரூபாய் வணிக திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றுள்ளது.

நாட்டின் சைக்கிள் சந்தையில், 44 சதவீதத்தை கொண்டுள்ள, முன்னணி நிறுவனமான, ‘ஹீரோ சைக்கிள்ஸ்’, சீனாவுடனான வணிக திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் மூலம், ’ஹீரோ சைக்கிள்ஸ்’ சுய சார்பை நோக்கி முன்னேறுவதாக, அதன் தலைவர் பங்கஜ் முஞ்சால் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:நன்றாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது. நாங்கள், சீனா உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறோம். வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் உயர்தர சைக்கிள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறோம். இப்போது அவற்றை ஜெர்மனியிலிருக்கும் எங்களுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் வடிவமைக்கிறோம். பொறியியல் பகுதிகள், பாகங்கள், வாகனத்துக்கான பிரேம்கள் ஆகியவற்றை, இப்போது நாங்களே செய்யத் துவங்கி இருக்கிறோம். அவற்றை உள்ளூர்மயமாக்கி வருகிறோம். விரைவில் சுயசார்புடைய நிறுவனமாக மாறிவிடுவோம்.

ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.‘வாட்ஸ்ஆப்’ என்ற ஒன்று பிறந்தது. அதைத் தொடர்ந்து, ‘ஊபர்’ உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் உதயமாகின. இம்முறை, கொரோனாவால் அனைத்தும் முடக்கப்பட்ட பிறகு, சைக்கிள் ஓட்டுவதில் ஒரு பெரிய எழுச்சியை காண்கிறோம்.எங்கு சைக்கிள்கள் ஓட்டுவது பாதுகாப்பானதாக இருக்கிறதோ, எங்கு அதற்கு தனிப் பாதைகள் இருக்கின்றனவோ, எங்கு பழுது நீக்கும் வசதிகள் இருக்கின்றனவோ, அங்கு ஓர் எழுச்சியை காணமுடிகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் என் மகளின் நிறுவனம், 600 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் அவரது நிறுவனமும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியாவில் பீஹார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம், மீண்டும் திரும்பி வருவது குறித்த எந்த திட்டமும் இப்போது இல்லை. அதனால், அங்கே அவர்கள் சைக்கிள்களை வாங்குகிறார்கள்.நாங்கள் இப்போது, ‘பிட்னஸ்’ பிரிவிலும் இறங்குவது குறித்து சிந்திக்கிறோம். ‘ஜிம்’களுக்கு செல்லும் நபர்கள், இப்போது சைக்கிளை தேர்வு செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)