ஏப்ரலில் தங்க இறக்குமதி 100 சதவீதம் சரிந்தது ஏப்ரலில் தங்க இறக்குமதி 100 சதவீதம் சரிந்தது ...  தங்க ஏற்றுமதி சரிவு வெள்ளி ஏற்றுமதி அதிகரிப்பு தங்க ஏற்றுமதி சரிவு வெள்ளி ஏற்றுமதி அதிகரிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரூ.10,500 கோடிக்கு தேங்கிக் கிடக்கும் 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2020
23:19

சேலம்:ஊரடங்கால், சேலம் வெள்ளி கொலுசுகளை அனுப்ப வழியில்லாததால், கடந்த மூன்று மாதத்தில், 2,000 டன் வெள்ளி ஆபரணங்கள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலத்தில், 65க்கும் மேற்பட்ட இடங்களில், 22 ஆயிரம் பட்டறைகளில், 1.5 லட்சம் தொழிலாளர்களால், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி உள்ளிட்ட ஆபரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிருந்து, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கால், கடந்த மார்ச், 25 முதல், பட்டறைகள் மூடப்பட்டு, அங்கு பணிபுரிந்த தொழிலாளர், 1.5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.ஊரடங்குக்கு முன், சேலத்தில் தயாரான, 2,000 டன் வெள்ளி ஆபரணங்களை, வெளி இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்தன.நேற்று, சுத்த வெள்ளி கிலோ, 50 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்கியுள்ள, 2,000 டன் வெள்ளி ஆபரணங்களில், தயாரிப்பாளர்களின் மதிப்புப்படி, 10 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் முடங்கியுள்ளது.

கடைகளில் விற்கும் நிலையில், செய்கூலி, சேதாரம், வரியுடன், அதன் மதிப்பு, 10 ஆயிரத்து, 500 கோடி ரூபாய். ஆக., 1ல், பக்ரீத்தால், வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள், ஆபரணங்களுக்கு, ‘ஆர்டர்’ கொடுக்க துவங்கிவிட்டனர். பொது போக்குவரத்து முடங்கி உள்ளதால், ஆபரணத்தை அனுப்ப முடியாத நிலைக்கு, பட்டறை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 20 சதவீத பட்டறை உரிமையாளர்கள் மட்டுமே, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு, ஆபரணங்களை எடுத்துச் சென்று விற்று வருகின்றனர்.

இதுகுறித்து, வெள்ளி பட்டறை உரிமையாளர்கள் கூறியதாவது:ஊரடங்கால், சேலத்தில் மூன்று மாதமாக பட்டறைகள் மூடப்பட்டதால், 1.50 லட்சம் தொழிலாளர் வேலை இழந்தனர்.கடந்த மாதம், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில், 20 சதவீத பட்டறைகள் செயல்பட துவங்கின. மீண்டும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

தொழிலாளர் நலன்கருதி, சேலத்தில் இருந்து வெள்ளி ஆபரணங்களை விற்பனைக்கு எடுத்துச்செல்ல, மத்திய, மாநில அரசுகள், ‘இ – பாஸ்’ வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)