பதிவு செய்த நாள்
11 ஜூலை2020
22:39
புதுடில்லி:கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ’செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
ஐதராபாதை சேர்ந்த, கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை விற்பனைக்கு வெளியிட உள்ளது. மேலும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.4 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
சீனாவை சேர்ந்த, ’போசன் பார்மா’ நிறுவனத்தின் வசம், இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் உள்ளன.இந்த பங்கு வெளியீட்டின்போது, போசன் பார்மா வசம் இருக்கும் பங்குகளில், 1.94 கோடி பங்குகளும், ’கிளாண்டு செல்சஸ் பயோ கெமிக்கல்ஸ்’ வசம் இருக்கும், 1 கோடி பங்குகளும் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாண்டு பார்மா நிறுவனத்தின் இந்த புதிய பங்கு வெளியீட்டின் மதிப்பு, 5 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என, கூறப்படுகிறது.சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய நிறுவனம் ஒன்று, சந்தையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, இதுதான் முதல் முறையாகும்.
கிளாண்டு பார்மா நிறுவனம், பி.வி.என். ராஜூ என்பவரால், 1978ம் ஆண்டு துவக்கப்பட்ட தாகும். 2017ல், போசன் பார்மா நிறுவனம் இந்நிறுவனத்தின், 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது.இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், உலகளவில், 60 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்திய நிறுவனம் ஒன்று, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது, இதுதான் முதல் முறையாகும்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|