பதிவு செய்த நாள்
11 ஜூலை2020
22:44
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இதுவரை இல்லாத வகையில், 51 ஆயிரத்து, 325 கோடி டாலராக அதிகரித்து, புதிய சாதனை படைத்துள்ளது.
இது, இந்திய மதிப்பில், 38.75 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இதற்கு முந்தைய வாரத்தில், அதாவது ஜூன், 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இருப்பு, 9,589 கோடி ரூபாய் அதிகரித்து, 50 ஆயிரத்து, 684 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.கடந்த ஜூன், 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பானது, அரை லட்சம் கோடி டாலர் என்ற நிலையை முதல் முறையாக தாண்டியது.
அதாவது, 50 ஆயிரத்து, 170 கோடி டாலர் என்ற நிலையை எட்டியது. அதன் பிறகு, கடந்த ஜூன், 12ம் தேதியன்று, 50 ஆயிரத்து, 764 கோடி டாலர் என்ற உயரத்தை எட்டியது.மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 566 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 49.5 கோடி டாலர் அதிகரித்து, 3,402 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.57 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|