பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
19:25
நாட்டில், புதுமை மற்றும் தொடக்கத் திறன்களை வளர்ப்பதற்கு, ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பதை இலக்காக கொண்டது, ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டம்.தொழில் வளம் தான் இந்தியாவை உயர்த்தி, வேலை வாய்ப்புக்களை உருவாக்கும்.
அதுவும், புதிய எண்ணங்களுடன் வரும், ‘ஸ்டார்ட் அப்’கள், நாட்டை வளப்படுத்தும் என்பதே, இந்த திட்டத்தின் எண்ணம். இதை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படும் கம்பெனிகள், ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள்.‘ஸ்டார்ட் அப் இந்தியா’ 2016 ஜனவரியில் துவக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைப்படி, ‘ஸ்டார்ட் அப்’ என்றால், உங்கள் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் கம்பெனி அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு உள்ள கூட்டு நிறுவனமாகவோ (எல்.எல்.பி.,) அல்லது கூட்டு நிறுவனமாகவோ இருக்க வேண்டும்.இந்தியாவில், 10 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு விற்பனை, 100 கோடியை தாண்டியிருக்க கூடாது. முக்கியமாக, உற்பத்தி முறைகள் அல்லது செயல்முறைகள் அல்லது சேவைகளில் புதுமை, மேம்பாடு அல்லது முன்னேற்றம் என்ற நோக்கத்துடன், கம்பெனி செயல்பட வேண்டும்.இந்த நிபந்தனைகளை, ஒரு கம்பெனி பூர்த்தி செய்தால், அதுவே, ‘ஸ்டார்ட் அப்’. ‘ஸ்டார்ட் அப்’ என்றாலே, பெரும்பாலும் சாப்ட்வேர் கம்பெனி என்று, பலருக்கு சந்தேகம் இருக்கலாம்; அது தவறு. மொத்தம், 48 வகையான தொழில் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொழில் பிரிவிலும், பல பிரிவுகள் உள்ளன.
‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இணையதளம்: startupindia.gov.in.
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gamil.com, www.startupbusinessnews.com.
மொபைல் எண்: 9820451259.
–சேதுராமன் சாத்தப்பன்–
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|