பதிவு செய்த நாள்
12 ஜூலை2020
23:39
அடல் பென்ஷன் திட்டத்தில், பயனாளிகள் ஆண்டு முழுதும் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் செலுத்தும் தொகையை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் பென்ஷன் திட்டத்தை, பென்ஷன் ஒழுங்கு முறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒருவர் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, ஓய்வு காலத்தில் மாதந்தோறும், 5,000 ரூபாய் வரை பென்ஷன் பெறலாம் இந்த திட்டத்தில் செலுத்தும் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளலாம். எனினும், இந்த வசதியை ஏப்ரல் மாதத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
தற்போது எப்போது வேண்டுமானாலும், பயனாளிகள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப தொகையை அதிகரிக்கவோ, குறைத்துக்கொள்ளவோ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் திட்டத்தில் தொடர்வதை வழி செய்யும் வகையில் இந்த மாற்றம் செய்யப் பட்டு உள்ளதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், உறுப்பினர்கள் வங்கி கணக்கில் இருந்து அவர்கள் செலுத்த வேண்டிய தொகை தானாக பிடித்தம் செய்யப்படுவதும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை முன்னிட்டு இது ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பயனாளிகள் டிஜிட்டல் வசதியை பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|