நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் பிரீஸ் ஸ்டார் இன்டீரியர் எமல்ஷன்நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் பிரீஸ் ஸ்டார் இன்டீரியர் எமல்ஷன் ... ‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா? ‘கிப்ட்’ பெற்றால் வரி செலுத்த வேண்டுமா? ...
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
23:38

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, நேற்று, 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


இதையடுத்து, 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை, முதன் முதலாக எட்டிய இந்திய நிறுவனம் எனும் சாதனையை, இந்நிறுவனம் படைத்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில், நேற்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை-, 2.97 சதவீதம் உயர்ந்து, 1,934.30 ரூபாயாக அதிகரித்தது.

இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், சந்தை மதிப்பு, 12.69 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை அதிகரித்ததற்கு முக்கிய காரணம், ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ நிறுவனத்தில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான, ’குவால்காம்’ 730 கோடி ரூபாயை முதலீடு செய்தது தான்.ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின், 25.24 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1.18 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டியுள்ளது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

குவால்காம் நிறுவனத்தின் முதலீடு குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி கூறியதாவது:குவால்காம் நிறுவனம் எங்களுடன் பல ஆண்டுகளாக, மதிப்புமிக்க பங்குதாரராக இருந்து வருகிறது. பாதுகாப்பான வயர்லெஸ் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க்கை உருவாக்குவதன் மூலம், இந்தியாவில், ‘டிஜிட்டல்’ மாற்றத்தை ஏற்படுத்த உதவ முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

‘ஆன்லைன் மீட்டிங்’ரிலையன்ஸ் நிறுவனம், இதுவரை, அதன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை, பங்குதாரர்கள் நேரில் வந்து பங்கேற்கும் வகையில் நடத்தி வந்த நிலையில், முதன் முறையாக, ‘ஆன்லைன்’ மூலமாக நடத்த இருக்கிறது.இதற்கான புதிய மெய்நிகர் தளம் மூலம், ஆன்லைனில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள், 500க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து, ஒரே சமயத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த கூட்டம், நாளை நடைபெற இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)