பதிவு செய்த நாள்
14 ஜூலை2020
22:49
திருப்பூர்:முக கவசம் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணியை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\
கொரோனா பரவல் காரணமாக, முழு பாதுகாப்பு கவச உடைகள் (பி.பி.இ.,) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. உற்பத்தியில் தன்னிறைவை எட்டியதையடுத்து, கடந்த மாதம், மாதத்துக்கு, 50 லட்சம் பி.பி.இ.,கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.மேலும், ‘ரேயான், நைலான், பாலியஸ்டர், விஸ்கோஸ்’ என, ஓவன் துணிகளால் ஆன கலப்பு மற்றும் பின்னல் வகையிலான மருத்துவப் பயன்பாடு அல்லாத முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், முகக் கவசம் மற்றும் முழுப் பாதுகாப்புக் கவச உடைகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும், ‘நான் ஓவன்’ துணி ஏற்றுமதிக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், 25 – 70 ஜி.எஸ்.எம்., (1 சதுர மீட்டருக்கான கிராம்) கொண்ட துணி வகைகளுக்கான ஏற்றுமதிக்கு தடை நீடிக்கிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|