பதிவு செய்த நாள்
14 ஜூலை2020
22:53
புதுடில்லி:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த, பிரபல உணவகமான, ’பார்பிக்யு நேஷன்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ’செபி’ வழங்கி உள்ளது.
திட்டம்
பார்பிக்யு நேஷன் நிறுவனம், 1,000-- – -1,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டிருந்தது.இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில், ‘செபி’க்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், செபி, தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 250 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், நிறுவனர்களின், 98.23 லட்சம் பங்குகளையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து, கடனை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.பார்பிக்யு நேஷன் நிறுவனத்தின் பின்னணியில், ‘சாயாஜி ஓட்டல்ஸ், சாயாஜி ஹவுஸ்கீப்பிங் சர்வீசஸ், கயூம் தணானி, ராவூப் தணானி மற்றும் சுசித்ரா தணானி’ ஆகியவை உள்ளன.
சந்தை சூழல்
மேலும், தனியார் பங்கு நிறுவனமான, ’சி.எக்ஸ்., பார்ட்னர்’சும் உள்ளது. இந்நிறுவனம் 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில், பார்பிக்யு நேஷனில் மூதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு முன், கடந்த, 2017ம் ஆண்டில் ஒரு முறை, பங்கு வெளியீட்டின் மூலம், 700 கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் இறங்கி விண்ணப்பித்தது
பார்பிக்யு நேஷன். 2018 ஜனவரியில் செபி அனுமதி வழங்கியது. இருப்பினும், அப்போது சந்தை சூழல் சரியாக இல்லாத காரணத்தால், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை. பார்பிக்யு நேஷன் நிறுவனத்துக்கு நாடெங்கும், 138 உணவகங்கள்உள்ளன.மேலும், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், மலேஷியா ஆகிய நாடுகளில், ஏழு உணவகங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|