புதிய பங்கு வெளியீடு வருகிறது ஐ.ஆர்.எப்.சி., புதிய பங்கு வெளியீடு வருகிறது ஐ.ஆர்.எப்.சி., ...  மாயமானைத் துரத்தி ஓடும் மத்தியமர்கள்! மாயமானைத் துரத்தி ஓடும் மத்தியமர்கள்! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு வர ‘பார்பிக்யு நேஷன்’ நிறுவனத்துக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2020
22:53

புதுடில்லி:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த, பிரபல உணவகமான, ’பார்பிக்யு நேஷன்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ’செபி’ வழங்கி உள்ளது.

திட்டம்

பார்பிக்யு நேஷன் நிறுவனம், 1,000-- – -1,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டிருந்தது.இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில், ‘செபி’க்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், செபி, தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இந்த பங்கு வெளியீட்டின்போது, 250 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், நிறுவனர்களின், 98.23 லட்சம் பங்குகளையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியிலிருந்து, கடனை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.பார்பிக்யு நேஷன் நிறுவனத்தின் பின்னணியில், ‘சாயாஜி ஓட்டல்ஸ், சாயாஜி ஹவுஸ்கீப்பிங் சர்வீசஸ், கயூம் தணானி, ராவூப் தணானி மற்றும் சுசித்ரா தணானி’ ஆகியவை உள்ளன.

சந்தை சூழல்

மேலும், தனியார் பங்கு நிறுவனமான, ’சி.எக்ஸ்., பார்ட்னர்’சும் உள்ளது. இந்நிறுவனம் 2013 மற்றும் 2015ம் ஆண்டுகளில், பார்பிக்யு நேஷனில் மூதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கு முன், கடந்த, 2017ம் ஆண்டில் ஒரு முறை, பங்கு வெளியீட்டின் மூலம், 700 கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் இறங்கி விண்ணப்பித்தது


பார்பிக்யு நேஷன். 2018 ஜனவரியில் செபி அனுமதி வழங்கியது. இருப்பினும், அப்போது சந்தை சூழல் சரியாக இல்லாத காரணத்தால், புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை. பார்பிக்யு நேஷன் நிறுவனத்துக்கு நாடெங்கும், 138 உணவகங்கள்உள்ளன.மேலும், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், மலேஷியா ஆகிய நாடுகளில், ஏழு உணவகங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)