பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
00:20
புதுடில்லி:மத்திய அரசின், ‘முத்ரா சிசு’ திட்டத்தின் கீழ் கடன் பெற்ற, 9.37 கோடி பேருக்கு, 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது, ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம். இத்திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. இதில், ‘சிசு’ திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா காரணமாக, சிறு வணிகங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டதை அடுத்து இவ்வணிகங்களுக்கு உதவும் வகையில், மத்திய அமைச்சரவை, 2 சதவீத வட்டி மானிய திட்டத்துக்கு அனுமதி வழங்கியது.
இது குறித்து, நிதிஅமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்த வட்டி மானியம், கடந்த மார்ச், 31ம் தேதி நிலுவையில் இருக்கும் கடன்களுக்கு வழங்கப்படும். கடனை முறையாக செலுத்தி வருபவர்களுக்கே, இந்த வட்டி மானியம் வழங்கப்படும்.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|