‘முத்ரா சிசு’ கடனுக்கு 2 சதவீத வட்டி மானியம் ‘முத்ரா சிசு’ கடனுக்கு 2 சதவீத வட்டி மானியம் ...  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனாக, ரூ.1.23 லட்சம் கோடி அனுமதி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனாக, ரூ.1.23 லட்சம் கோடி அனுமதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எங்கிருந்தும் வேலை பார்ப்பதற்கு எஸ்.பி.ஐ., வங்கி தயாராகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
00:28

மும்பை:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் ஊழியர்கள் எங்கிருந்தும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க இருப்பதாகவும், இதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்க முடியும் எனவும், வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வங்கியின், 65வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்ய வசதியாக, உள்கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம்.இதன் மூலம், வேலை – வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் பாதுகாக்க முடியும்.எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்யக் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்கவும் முடியும்.

கொரோனா பரவல் பாதிப்புகள் இன்னும் தொடர்வதால், நடப்பு நிதியாண்டு மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இருப்பது போன்றே, எஸ்.பி.ஐ., வங்கிக்கும் சவால் மிகுந்ததாகவே இருக்கும். இவற்றை சாமாளிக்கும் வகையில், வங்கி தயார் நிலையில் இருக்கிறது.

வங்கியின் மொபைல் செயலியான, ‘யோனோ’ ஏற்கனவே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.அடுத்த ஆறு மாதங்களில், இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை, இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)