பதிவு செய்த நாள்
16 ஜூலை2020
00:28
மும்பை:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் ஊழியர்கள் எங்கிருந்தும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை உருவாக்க இருப்பதாகவும், இதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்க முடியும் எனவும், வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வங்கியின், 65வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி, எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்ய வசதியாக, உள்கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம்.இதன் மூலம், வேலை – வாழ்க்கை இரண்டையும் சமநிலையில் பாதுகாக்க முடியும்.எந்தவொரு இடத்திலிருந்தும் வேலை செய்யக் கூடிய கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், 1,000 கோடி ரூபாயை சேமிக்கவும் முடியும்.
கொரோனா பரவல் பாதிப்புகள் இன்னும் தொடர்வதால், நடப்பு நிதியாண்டு மற்ற வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு இருப்பது போன்றே, எஸ்.பி.ஐ., வங்கிக்கும் சவால் மிகுந்ததாகவே இருக்கும். இவற்றை சாமாளிக்கும் வகையில், வங்கி தயார் நிலையில் இருக்கிறது.
வங்கியின் மொபைல் செயலியான, ‘யோனோ’ ஏற்கனவே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.அடுத்த ஆறு மாதங்களில், இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை, இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|