பதிவு செய்த நாள்
05 ஆக2020
22:15
மும்பை:தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப முடியாத நிலை தொடர்வதால், சிறு வணிகங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய பகுதிகளில் இருக்கும் சிறு வணிகங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து, இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழிலாளர் பற்றாக்குறை தானியங்கி இயந்திரங்களுக்கான தேவையை துரிதப் படுத்தினாலும், உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்கள் இதன் காரணமாக, குறைந்த திறன் பயன்பாடு, அதிக உற்பத்தி செலவு போன்றவற்றை சந்திக்க வேண்டியதிருக்கும். அதனால் அவற்றின் லாபம் குறையும்.கிராமங்களிலிருந்து மீண்டும் நகரங்களுக்கு திரும்பியவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் வாழ்வாதாரங்கள் இல்லாமல் போய்விட்டதால், நகரங்களில் வாழ, அதிக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் திரும்பாததால் மஹாராஷ்டிரா, டில்லி, ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. பீஹாரிலிருந்து தான் அதிகமான பேர் வெளிமாநிலங்களில் பணியாற்ற வருகின்றனர் என்ற போதும், அங்கும் விவசாய வேலைக்கு, வெளி மாநில ஆட்கள் தேவைப்படுகின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|