பதிவு செய்த நாள்
05 ஆக2020
22:50
புதுடில்லி:கடந்த ஜூலையில், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது.
‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த ஜூலையில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 34.2 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. இருப்பினும் இது, ஜூன் மாதத்தை விட சற்று அதிகமாகும். இது, கடந்த ஜூன் மாதத்தில், 33.7 புள்ளிகளாக இருந்தது. ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அது வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் அது சரிவையும் குறிக்கும்.
அந்த வகையில் கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது.நாடு முடக்கப்பட்டது, தேவைகள் குறைந்தது ஆகியவை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. வணிக செயல்பாடுகளும், புதிய ஆர்டர்களும், ஜூலையில் குறைந்துள்ளன.
தேவைகள் கடுமையாக குறைந்ததால், சேவைகள் வழங்குவோர், ஜூலை மாதத்தில் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.ஜூலை மாத தரவுகளை வைத்து பார்க்கும்போது, சரிவு குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஊரடங்குகள் பல இடங்களில் இன்னும் நீடிப்பதால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால், ஊரடங்குகள் தளர்த்தப்பட்டால் மட்டுமே நிறுவனங்கள் ஸ்திரமான நிலைக்கு திரும்பும்.தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும் குறியீடு, ஜூலையில், 37.2 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, ஜூனில், 37.8 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|