ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் புதிய போக்குகள் ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் புதிய போக்குகள் ...  நிலத்தை விற்று நிதி திரட்ட மாநில அரசுகள் முயற்சி நிலத்தை விற்று நிதி திரட்ட மாநில அரசுகள் முயற்சி ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
'பிரஸ்டிஜ்' குழும சொத்துக்களை விற்க முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
22:49

புதுடில்லி:முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'பிரஸ்டிஜ்' குழுமம், அதன் பல்வேறு வர்த்தக கட்டடங்களை,'பிளாக்ஸ்டோன்' எனும் உலகளாவிலான முதலீட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.

பிரஸ்டிஸ் நிறுவனம், அலுவலக பூங்காக்கள், மால்கள் போன்றவற்றை, 12 - 13.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, எதிர்கால வளர்ச்சிக்கும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.இந்த விற்பனை முயற்சி, இந்த காலாண்டின் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூரை அடிப்படையாக கொண்ட, 'பிரஸ்டிஜ் எஸ்டேட்ஸ்' அதன், 80 லட்சம் சதுர அடி கொண்ட, முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அலுவலக பூங்காக்கள் மற்றும் 40 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, ஒன்பது மால்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முன்வந்து உள்ளது. மேலும், பிரஸ்டிஜ் குழுமம், அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும், அலுவலக கட்டட திட்டங்களில், 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.


துறை சார்ந்த வேறு சிலர், 1.6 கோடி சதுர அலுவலக கட்டடங்கள், ஒன்பது மால்கள், இரண்டு ஓட்டல்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர்.விற்பனை செய்யப்பட இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளன.பட்டியலிடப்பட்ட நிறுவனமான, பிரஸ்டிஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்துக்கு, 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த, பிளாக்ஸ்டோன் நிறுவனம், இதுவரை இந்திய ரியல் எஸ்டேட்டில், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளது.பிளாக்ஸ்டோன் - பிரஸ்டிஜ் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த டீல் நிறைவுற்றால், இதுவே, மதிப்பின் அடிப்படையில் இத்துறையில் இதுவரை இல்லாத மிகப் பெரிய டீலாக இருக்கும்.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)