பதிவு செய்த நாள்
10 ஆக2020
23:11
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன்முறையாக, 2,480 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், லாபம் எடுக்கும் நோக்கமே.
கடந்த ஜூலை மாதத்தில், மொத்தம், 89 ஆயிரத்து, 813 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் பண்டு துறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, ஜூன் மாதத்தை விட, 7,265 கோடி ரூபாய் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டை பொறுத்தவரை, முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை, 18 லட்சம் அளவுக்கு உயர்வை கண்டுள்ளது. இதையடுத்து, மொத்த கணக்குகளின் எண்ணிக்கை, 9.15 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் கணக்குகளின் எண்ணிக்கை, 10 லட்சத்துக்கும் மேலாக அதிகரித்து, 6.37 கோடி கணக்குகளாக உயர்ந்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய காலாண்டில், 6.27 கோடி கணக்குகளாக இருந்தது.கடன் சார்ந்த திட்டங்களில், 3.24 லட்சம் கணக்குகள் அதிகரித்து, 61.35 லட்சம் கணக்குகளாக உயர்ந்துள்ளன.மதிப்பீட்டு காலாண்டில், முதலீட்டாளர்கள், 1.24 லட்சம் கோடி ரூபாயை, பல்வேறு மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|