தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 16.6 சதவீதம் சரிவு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூனில் 16.6 சதவீதம் சரிவு ... தங்கம் விலையில் வீழ்ச்சி - மூன்று நாளில் சவரன் ரூ.2,248 சரிந்தது தங்கம் விலையில் வீழ்ச்சி - மூன்று நாளில் சவரன் ரூ.2,248 சரிந்தது ...
‘கிருமிகளுடன் போராடியபடியே தான் பொருளாதாரத்தை வளர்க்கணும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
22:46

பெங்களூரு:கொரோனாவை முன்னிட்டு பொருளாதார செயல்பாட்டை நிறுத்தி வைக்க முடியாது. கிருமி களுடன் போராடிக் கொண்டே வளர்ச்சியை பெற வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


அதேசமயம், கொரோனா பாதிப்பால், நாட்டின் ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுதந்திரம் பெற்றதிலிருந்து இல்லாத வகையில், மிக குறைந்த வளர்ச்சியை எட்டக்கூடும் என்ற தன்னுடைய அச்சத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.


‘இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி’ சார்பான காணொளி கூட்டத்தில், இந்தியாவின், ‘டிஜிட்டல் புரட்சி’ குறித்த கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரோனாவுக்கான தடுப்பூசி, இந்தியாவுக்கு வருவதற்கு, 6 முதல், 9 மாதங்கள் வரை ஆகும். ஒரு நாளைக்கு, 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதாக இருந்தாலும், 140 நாட்கள் பிடிக்கும். இந்நோய் பரவலை தடுக்க நீண்ட காலமாகும்.ஆனால், அதற்காக நாம் பொருளாதாரத்தை நிறுத்தி வைக்க முடியாது. எனவே, அனைவரும் புதிய வழமைக்கு மாற வேண்டும். அது நம் பொருளாதாரத்தை வளர்க்கும் வகையில், அதே சமயம் கிருமிகளுடன் போராடும் வகையில் அமைய வேண்டும்.

பொருளாதாரத்தை மீண்டும் பழைய பாதைக்கு கொண்டுவர, ஊர் சென்றுவிட்ட, 14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு மீண்டும் திரும்ப வகை செய்ய வேண்டும்.வீட்டில் இருந்து பணிஆற்றும் வாய்ப்பில்லாத நிறுவனங்களுக்கு, சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். வணிகங்கள் மற்றும் பொதுமக்கள், 24 மணி நேரம் செயல்பட ஏதுவாக, பொது போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)